|

மரங்கள் வளர்ச்சியை பாதிக்கும் ஓசோன் ஆராய்ச்சியில் தகவல்

ஓசோன் படலம் வாயு மண்டலத்தின் உயரமான அடுக்குகளில் காணப்படுகிறது.இது சூரியனின் கதிர் வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.அதே போல தரைப்பகுதியிலும் ஓசோன் உள்ளது.இது தாவரங்கள் விலங்குகளை பாதிக்கிறது.இதுபற்றி விக்டோரியா விட்டிக் என்ற விஞ்ஞானி ஆராய்ச்சி செய்தார்.அவர் கூறியதாவது:-பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி,எரிபொருட்களை பயன்படுத்துவதனால் ஓசோனின் அளவு அதிகரிக்கிறது.வாயு மண்டலத்தில் ஆக்சிஜன் உள்ளதைப் போல ஓசோன் வாயுவும் உண்டு.தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்த அளவைவிட தற்பொழுது ஓசோன் 4-மடங்கு அதிகரித்து விட்டது.அதனால் மரங்களின் வளர்ச்சி கி.பி.1800களில் இருந் ததை விட தற்போது 7-சதவிதம் குறைந்துள்ளது.இது 2100-வாக்கில் இன்னும் 10-சதவிதம் அதிகரித்து 17-சதவீதம் ஆகிவிடும்.இது மரங்களில் கார்பன் தன்மயமாவதை தடுத்து மரங்களின் வளர்ச்சி மற்றும் அதன் பொருண்மையை குறைக்கும்.இது ஊசி இலை மரங்களைவிட படர்ந்த இலையுடைய மரங்களை எளிதில் தாக்குகிறது. மரங்களின் வேர்ப்பகுதியை பாதிப்பதன் மூலம் புயலால் எளிதில் சேதப்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

"மரங்களை வளர்த்து எமது சுழலை பாதுகாப்போம் "

Posted by Anonymous on 12:01. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "மரங்கள் வளர்ச்சியை பாதிக்கும் ஓசோன் ஆராய்ச்சியில் தகவல்"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added